மேலும் செய்திகள்
தேரடி விநாயகருக்கு சந்தன காப்பு விழா
11-Aug-2025
திருக்கோவிலுார் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருக்கோவிலூர் ஏரிக்கரை மூளையில் உள்ள இரட்டை விநாயகர் மற்றும் என்.ஜி.ஜி.ஓ., நகர் சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. திருக்கோவிலூர் ஏரிக்கரை மூளையில் உள்ள ஜெ ய கணபதி, விஜய கணபதி இணைந்த இரட்டை விநாயகர் கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம், வெள்ளி காப்பு அலங்காரத்துடன் ஷோடசோபவுபச்சார தீபாரதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு செந்தூரக் காப்பு அலங்காரத்தில் லட்சார்ச்சனை, இரவு 9:00 மணிக்கு உற்சவர் மூஷிக வாகனத்தில் தீபாராதனை நடந்தது. என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள சக்தி வினாயகர் ஆலயத்தில் காலை 9:00 மணிக்கு மூலவர் விநாயகருக்கு மகா அபிஷேகம், வெள்ளி கவசத்தில் அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை, அர்ச்சனை, சுவாமி வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
11-Aug-2025