உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

சின்னசேலம்: சின்னசேலம் அருகே மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.திட்டக்குடி அடுத்த பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 44; இவரது மனைவி அருணா, 24; சரவணன் சென்னையில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.அருணா சின்னசேலம் அடுத்த பாண்டியங்குப்பம் கிராமத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 19 ம் தேதி காலை 8:00 மணியளவில் மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.புகாரின்பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை