மேலும் செய்திகள்
குட்கா விற்ற முதியவர் கைது
04-Sep-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கனவகள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.அதில் கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்த செல்லப்பிள்ளை மனைவி சரோஜா,57; என்பவர் தனது பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து ரூ.2,200 மதிப்புகள் பொருட்களை சரோஜாவிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து கைது செய்தனர்.
04-Sep-2024