உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே விற்னைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி மோரைப்பாதையை சேர்ந்த காமராஜ் மனைவி முனியம்மாள், 55; என்பவர் தனது பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் கூல்லிப் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, முனியம்மாளை கைது செய்து, கடையில் இருந்த ரூ. 20,700 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி