உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

சங்கராபுரம்; கள்ளக்குறிச்சி மாவட்டம், தேவபாண்டலத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 30; இவருக்கு, 'கலைஞர் கனவு இல்ல வீடு' திட்டத்தில், வீடு ஒதுக்கப்பட்டு, பின், ரத்து செய்யப்பட்டது. ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், கலெக்டர் பிரசாந்த் , சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், பி.டி.ஓ., ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து, வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார். பி.டி.ஓ., நாராயண சாமி புகாரின்படி, சங்கராபுரம் போலீசார் சந்தோஷ் குமாரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி