உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரதாபுரம் கோவில் குளத்தில் பாசி படிந்து தண்ணீர் மாசு

வரதாபுரம் கோவில் குளத்தில் பாசி படிந்து தண்ணீர் மாசு

வாலாஜாபாத், : வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் ஊராட்சி, வரதாபுரத்தில், சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே ஊராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பிலான பொதுக்குளம் உள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் இக்குளத்தில் நீராடுவதோடு கோவில் விழா காலங்களில் குளத்தின் நீரை கொண்டு பூஜைகள் செய்கின்றனர்.இந்நிலையில், சில ஆண்டுகளாக இந்த குளத்தின் தண்ணீரில் பாசி படிந்து தண்ணீர் மாசடைந்து பச்சை நிறமாக உள்ளது. இதனால், கோடைக்காலத்தில் இந்த குளத்தில் தண்ணீர் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.எனவே, வரதாபுரம் சீனிவாச பெருமாள் கோவில் குளத்தில் பாசி படிந்து உள்ளதை அகற்றி பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தமாக்க வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை