உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உடைந்த மேன்ஹோல் மூடி வாகன ஓட்டிகள் அச்சம்

உடைந்த மேன்ஹோல் மூடி வாகன ஓட்டிகள் அச்சம்

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சி சேனியர் தெருவில், புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் மையப்பகுதியில், 'மேன்ஹோல்' அமைக்கப்பட்டு உள்ளது.கடந்த இரு வாரங்களுக்கு முன், அவ்வழியாக கனரக வாகனம் சென்ற போது, 'மேன்ஹோல்' மூடி உடைந்து விட்டது. இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், 'மேன்ஹோல்' உடைந்த பகுதியில் உள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து, விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, உடைந்த நிலையில் உள்ள மேன்ஹோல் மீது, புதிதாக மூடி அமைத்து சீரமைக்க, முத்தியால்பேட்டை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள்வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ