உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஜயேந்திரர் ஆராதனை மஹோத்ஸவம் 9ல் காஞ்சி சங்கர மடத்தில் துவக்கம்

ஜயேந்திரர் ஆராதனை மஹோத்ஸவம் 9ல் காஞ்சி சங்கர மடத்தில் துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி, சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஏழாவது வார்ஷிக ஆராதனை மஹோத்சவம் வரும் 11ம் தேதி, காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெறுகிறது.இதையொட்டி, வரும் 9ம் தேதி முதல், 11ம் தேதி வரை என, மூன்று நாட்களும், வேதபாராயணம், வித்வத் ஸதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், சங்கீதாஞ்சலி உள்ளிட்டவை நடக்கிறது.வார்ஷிக ஆராதனை மஹோத்சவ தினமான, வரும் 11ம் தேதி, காலை 7:00 மணிக்கு, ருத்ர பாராயணம், ஹோமம், மதியம் 1:00 மணிக்கு பூர்ணாஹூதியும், சுவாமிகளின் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது.காலை 9:00 மணி முதல், பஞ்சரத்ன கீர்த்தனை, கோஷ்டி கான நாத சமர்ப்பணம் உள்ளிட்டவை நடக்கிறது. வார்ஷிக ஆராதனை மஹோத்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் சங்கரமடம் மேலாளர் சுந்தரேச அய்யர், ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை