உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரும் 3ல் திரவுபதியம்மன் கோவில் விழா துவக்கம்

வரும் 3ல் திரவுபதியம்மன் கோவில் விழா துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஜூலை -21ம் தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.இந்த திருவிழாவை முன்னிட்டு, வரும்- 2ம் கிராம தேவதை என, அழைக்கப்படும் ஏகாத்தம்மன் பொங்கலிடும் நிகழ்ச்சியும்,- 3ம் தேதி காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்க உள்ளது.தினமும் பிற்பகல் 1:00 மணி அளவில், திருவண்ணாமலை மாவட்டம், நமண்டி கோவிந்தராஜுன் மஹாபாரத சொற்பொழிவு மற்றும் சிறுவஞ்சிப்பட்டு சீதாராமன் குழுவினர் நாடகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ