உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கரும்பு பயிர்கள் இயந்திரம் வாயிலாக களையெடுப்பு குறித்து செயல்முறை பயிற்சி

கரும்பு பயிர்கள் இயந்திரம் வாயிலாக களையெடுப்பு குறித்து செயல்முறை பயிற்சி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றிய சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. குறிப்பாக நெல் மற்றும் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படுகிறது.இப்பகுதிகளில், சில ஆண்டுகளாக விவசாய பணிகள் மேற்கொள்ள கூலி ஆட்கள் தட்டுப்பாடு பிரச்னை தொடர்ந்து நிலவுகிறது. கிராமங்கள் தோறும் 100 நாள் வேலைக்கு ஆட்கள் சென்று விடுவதால், பயிர்கள் நடவு செய்தல், களை எடுத்தல் மற்றும் அறுவடை பணிகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு இருந்து வருகிறது.இதனிடையே, நெற் பயிர் நடவு செய்ய, நெல் மற்றும் கரும்பு பயிர்கள் அறுவடை செய்ய இயந்திரம் கொண்டு வரப்பட்டு தற்போது அதன் வாயிலாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்நிலையில், கரும்பு மற்றும் நெல் பயிர்கள் சாகுபடி நிலங்களில், இயந்திரம் மூலம் களை எடுப்பு முறை சாத்தணஞ்சேரி, காவூர், சீட்டணஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்படுகிறது.இதற்காக சென்னை, ஜார்ஜ் மைஜோ என்கிற நிறுவனம் சார்பில், கிராமங்களில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து முகாம் நடத்தி அவ்வகையான இயந்திரங்கள் வழங்கப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக சாத்தணஞ்சேரி பகுதியில் விவசாயிகளுக்கு இயந்திரம் வாயிலாக கரும்பு பயிர்களில் களையெடுப்பது குறித்த செயலாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் தமிழ்ச்செல்வி மற்றும் ஜார்ஜ் மைஜோ நிறுவனத்தைச் சேர்ந்த பிரான்சிஸ், பர்துல்லா, கணேசன்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று இயந்திர பயன்பாட்டு முறை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்து, நிலங்களில் செயல்முறை பயிற்சி அளித்தனர்.முகாமில், விவசாயிகள் ஏற்கனவே பயன்பாட்டில் வைத்துள்ள களை எடுப்பு இயந்திரங்கள் இலவசமாக பழுது பார்த்து தரப்பட்டு. விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ