பயன்பாட்டிற்கு லாய்கற்ற பேரணக்காவூர் சாலை
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பேரணக்காவூர் கிராமத்தில் இருந்து, சாலவாக்கம் மற்றும் வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல அப்பகுதி விவசாய நிலங்கள் மற்றும் காட்டு வழியாக ஒரு கி.மீ., தூரம் கொண்ட சாலை உள்ளது.இச்சாலையை பயன்படுத்தி அப்பகுதியினர், அருங்குன்றம்- சாலவாக்கம் இணைப்புச் சாலை பகுதிக்கு வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.இந்நிலையில், இந்த சாலை பகுதி, சில ஆண்டுகளாக மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகும் நிலை உள்ளது.அவசர நேரங்களில் இச்சாலையை உடனடியாக கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர்.எனவே, பழுதடைந்த இச்சாலையை சீர் செய்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.