உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் இடையே கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் இடையே கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்:வாலாஜாபாதில் இருந்து, சுங்குவார்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. சுற்றுவட்டாரங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் இச்சாலை வழியில் உள்ளன.இக்கிராமங்களைச் சேர்ந்தோர், தினமும், சுங்குவார்சத்திரம் - வாலாஜாபாத் மற்றும் இடையிலான பகுதிகளுக்கும், பேருந்து வாயிலாக பயணிக்கின்றனர். மேலும், இச்சாலையொட்டி உள்ள பல்வேறு கிராமங்களில், தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.அத்தொழிற்சாலைகளில், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணியாற்றுகின்றனர்.இந்நிலையில், வாலாஜாபாதில் இருந்து, சுங்குவார்சத்திரம் செல்ல போதுமான பேருந்து வசதி இல்லை. இதனால், குறித்த நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல இயலாமல் பல தரப்பினரும் தவித்து வருகின்றனர்.எனவே, வாலாஜாபாத் - சுங்கவார்சத்திரம் இடையே, காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ