உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மயங்கி விழுந்து தொழிலாளி பலி

மயங்கி விழுந்து தொழிலாளி பலி

வாலாஜாபாத்:ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜுமால் 21. இவர், வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் கிராமத்தில் தங்கி, அப்பகுதி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பணியில் இருந்த ஜுமால், திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்