உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேளாண் அடையாள அட்டை பெற சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

வேளாண் அடையாள அட்டை பெற சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், படப்பை, உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில், 85,000 ஏக்கர் நிலங்களில், நெல், காய்கறி உள்ளிட்ட பல வித பயிர்களை, 65,800 விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இவர்களுக்கு, தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு, வேளாண் அடுக்ககம் திட்டத்தின்கீழ் விவசாயிகளின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்யும் பணியை வேளாண் துறை துவக்கி உள்ளது.இதில், வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள், வேளாண் தொழில் நுட்பத்தினர், உதவி தோட்டக்கலை அலுவலர், மகளிர் குழுவினர் ஆகியோர் தனித்தனியாக வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி விபரங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.விண்ணப்பிக்க தவறிய விவசாயிகள், வேளாண் துறையினர் மற்றும் பொது சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை