உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் 17 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

காஞ்சியில் 17 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

காஞ்சிபுரம்:தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் குப்பை, கழிவுகளை அகற்ற உள்ளாட்சி அமைப்புகள், இரு நாட்களாக தனி கவனம் செலுத்தி வந்தது.வெடி மருந்துகள் நிறைந்த பட்டாசு கழிவுகளை தனியாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும் என, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகத்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, வழக்கமாக சேகரிக்கும் குப்பை, கழிவுகளை தனியாகவும், பட்டாசு கழிவுகளை தனியாகவும் அகற்றியுள்ளனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியில், அன்றாடம் 80,000 கிலோ குப்பை, தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், மாநகராட்சியின், 51 வார்டுகளிலும் பட்டாசு கழிவுகள் ஏராளமாக சேர்ந்தன.இவற்றை, தீபாவளியன்று காலை முதல், நேற்று மாலை வரை என, இரு நாட்கள் தொடர்ந்து அகற்றினர். அவ்வாறு, தீபாவளி பண்டிகை அன்று, 6,000 கிலோ பட்டாசு கழிவுகளும், நேற்று 11,000 கிலோ என, மொத்தம் 17,000 கிலோ பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டு, நத்தப்பேட்டை குப்பை கிடங்கில் தனியாக குவிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ