உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போதையில் கால்வாயில் விழுந்த வாலிபர் பலி

போதையில் கால்வாயில் விழுந்த வாலிபர் பலி

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் மேம்பாலம் அருகே உள்ள மழைநீர் கால்வாயில், 40 வயதுள்ள வடமாநில நபர் ஒருவர், கால்வாயில் விழுந்து கிடப்பதாக ஒரடகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு வந்த போலீசார் கால்வாயில் விழுந்து கிடந்தரை வரை மீட்டு, பரிசோதித்ததில் அவர் உயிரிழந்து தெரிந்தது. உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில் அவர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜனிக் ராஜீ, 46, என்பதும், மது போதையில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்ததா கவும் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ