உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அண்ணா பல்கலை கழக மாணவர்கள் இயற்கை விவசாயப்பணிகள் கவனிப்பு 

அண்ணா பல்கலை கழக மாணவர்கள் இயற்கை விவசாயப்பணிகள் கவனிப்பு 

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, நரப்பாக்கம் கிராமத்தில், நாட்டு நல பணிகள் திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில், கிண்டி அண்ணா பல்கலை கழக நாட்டு நல திட்ட பணிகள் மாணவ-மாணவியர் சுற்றுசுழல் விழிப்புணர்வு, குழந்தைகள் மேம்பாடு, கல்வி சார்ந்த பிற சமூக பணிகள் செய்து வருகின்றனர். இயற்கை விவசாயம் ஊக்குவிக்கும் விதமாக, இயற்கை காய்கறி சாகுபடிக்கு நிலம் சரி செய்தல், விதை விதைக்கும் பணியை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் செய்தனர். கிண்டி அண்ணா பல்கலை கழக நாட்டு நல திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகாதேவி மற்றும் நரப்பாக்கம் இயற்கை விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ