அம்பேத்கர் விருது பெற விண்ணப்பம் வரவேற்பு
காஞ்சிபுரம்,:பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு, தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.விருது பெறுவோருக்கு, 5.80 லட்ச ரூபாய் விருது தொகையும், 2025ம் ஆண்டின் திருவள்ளுவர் திருநாளன்று விருதும் வழங்கப்படும்.விருது பெற விரும்புவோர் www.tn.gob.in/ta/forms/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பம் பெறலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ.25க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.