உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த மின்கம்பம்மாற்ற வலியுறுத்தல்

சேதமடைந்த மின்கம்பம்மாற்ற வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தப்பேட்டையில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க பிரதான சாலையோரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், மாருதி நகரை ஒட்டியுள்ள சாலையோத்தில் உள்ள ஒரு மின்கம்பத்தில் சிமென்ட் காரை உதிர்ந்து கம்பிகள்வெளியே தெரியும் நிலையில் உள்ளது.இச்சாலையில் வேகமாக செல்லும் கனரக வாகனங்கள், சாலையோரத்தில் சிதிலமடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தின் மீது லேசாக உரசினாலே மின்கம்பம் நொறுங்கி விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, சேதமடைந்த நிலையில் உள்ள பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய கம்பம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ