உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காமாட்சியம்மன் கோவிலில் உண்டியல் வசூல் ரூ.59 லட்சம்

காமாட்சியம்மன் கோவிலில் உண்டியல் வசூல் ரூ.59 லட்சம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வாயிலாக எண்ணப்பட்டு வருகின்றன.அதன்படி, கோவிலில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், மணியகாரர் சூரியநாராயணன், ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், சரக ஆய்வர் பிரித்திகா முன்னிலையில், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக எண்ணப்பட்டன.இதில், 59 லட்சத்து 16,361 ரூபாய் ரொக்கமும், 163 கிராம் தங்கமும், 432 கிராம் வெள்ளியும், உண்டியலில் காணிக்கையாக, கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது என, கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ