மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் தீனா, 16; நேற்று முன்தினம் இரவு, சதீஷ் என்பவருடன் அரண்வாயல் பகுதியில் உள்ள மகிமதி பார்ட்டி ஹாலுக்கு ஆடியோ செட் அமைக்கும் பணிக்கு தீனா சென்றார். அங்கு, மின்சாரம் பாய்ந்ததில், தீனா படுகாயமடைந்தார்.அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.