பிரதான குழாயில் உடைப்பு புத்தேரியில் வீணாகும் குடிநீர்
புத்தேரி:புத்தேரி ஊராட்சியில், பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால், குடிநீர் வீணாகி வருகிறது. காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு குழாய் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சால போகம் - புத்தேரி சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலம் அருகில், பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதமாக கு டிநீர் வீணாகி வருகிறது. எனவே, உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சீரமைக்க, புத்தேரி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.