மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
19-Jul-2025
உத்திரமேரூர்:மலையாங்குளத்தில் தொண்டையில் முட்டை சிக்கி, கட்டட மேஸ்திரி ஒருவர் உயிரிழந்தார். உத்திரமேரூர் தாலுகா, மலையாங்குளம் விநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ரவி, 45; கட்டட மேஸ்திரி. இவர், நேற்று முன்தினம் இரவு, உணவு சாப்பிடும் போது, அவித்த முட்டையை அப்படியே விழுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, அவரின் தொண்டையில் முட்டை சிக்கியது. இதையடுத்து, ரவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைக்கண்ட குடும்பத்தினர், அவரை படூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, ரவி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
19-Jul-2025