உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துர்நாற்றம் வீசி வரும் குளம் ஒட்டிவாக்கத்தில் சீர்கேடு

துர்நாற்றம் வீசி வரும் குளம் ஒட்டிவாக்கத்தில் சீர்கேடு

வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஒட்டிவாக்கம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில், குடியிருப்புகளுக்கு அருகே குளம் உள்ளது.கடந்த ஆண்டுகளில், இக்குளம் அப்பகுதிக்கான குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது. பாலாற்று குடிநீர் வசதி ஏற்பட்டதன் பின், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், தற்போது கால்நடைகளின் நீராதாரமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இக்குளம் முறையான பராமரிப்பின்றி, குளம் முழுதும் பாசி படர்ந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும், அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சமீபகாலமாக குளத்தில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.மேலும், கொசு உற்பத்தி, தொற்று நோய் போன்றவைக்கு, இந்த குளத்து நீர் வழிவகுப்பதாக உள்ளது. இதனால், குளத்தை சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, இக்குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதோடு, குளத்தில் படர்ந்துள்ள பாசிகளை அகற்றி, முறையாக பராமரிக்க அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ