மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
31-Jul-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வடக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், மாதந்தோறும் மூன்றாவது வியாழக்கிழமை, காஞ்சிபுரம் வடக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்குரிய மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை, காலை 11:00 மணி அளவில், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த குறைதீர் கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று, தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
31-Jul-2025