காஞ்சிபுரத்தில் நாளை மறுதினம் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை மறுதினம் நடக்க இருப்பதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், நாளை மறுதினம், காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண் துறை, தோட்டக்கலை, மின்வாரியம், வருவாய் துறை, கூட்டுறவு, கால்நடை என, வேளாண் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை நேரடியாகவும், மனுவாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.