உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஹிந்து அறநிலையத்துறை சார்பில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

ஹிந்து அறநிலையத்துறை சார்பில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

காஞ்சிபுரம், ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் இரண்டு ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. -ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், சீர்வரிசை பொருட்களுடன், ஏழை எளிய மக்களுக்கு இலவச திருமணம் நடத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் இரண்டு ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்களுடன் நேற்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், மேயர் மகாலட்சுமி ஆகியோர் இரு ஜோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைத்து, 70,000 ரூபாய் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை உள்ளிட்ட 26 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினர். இதில், கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், மணமகன், மணமகள் வீட்டார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ