உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் வடிகால்வாய் துார்வார வலியுறுத்தல்

மழைநீர் வடிகால்வாய் துார்வார வலியுறுத்தல்

புஞ்சையரசந்தாங்கல், காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சையரசந்தாங்கல் கிராமத்தில், பிள்ளையார் கோவில் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயில் மழைநீர் செல்லும் நீர்வழித்தட பாதையில் கொடி, கொடிகள் மற்றும் குப்பை குவியால் துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.எனவே, மழைநீர் நீர் வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை