காஞ்சி புகார் பெட்டி : சேதமான சாலையில் சகதிநீர் தேக்கம்
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் ஒட்டியுள்ள, காமாட்சியம்மன் சன்னிதி தெரு வழியாக தந்தை பெரியார் தெரு, முனிசிபல் குடியிருப்பு, வடக்கு கிருஷ்ணன் தெரு, தெற்கு கிருஷ்ணன் தெரு உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.பழைய ரயில் நிலையத்திற்கு வந்து செல்வோரும் இத்தெரு வழியாக சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில் 25 மீட்டர் நீளத்திற்கு சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், மழை பெய்தால், பள்ளத்தில் தேங்கும் மழைநீர் சகதிநீராக மாறி விடுகிறது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, பழைய ரயில் நிலையம் அருகில் சேதமடைந்த சாலையை, 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சி.மணிகண்டன்,காஞ்சிபுரம்.