உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த சிறுபாலம் சீரமைப்பது எப்போது?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சேதமடைந்த சிறுபாலம் சீரமைப்பது எப்போது?

சேதமடைந்த சிறுபாலம் சீரமைப்பது எப்போது?

உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமம், பிள்ளையார் கோவில் எதிர் தெருவில், சாலையின் குறுக்கே, 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன், இப்பாலம் வழியாக கனரக வாகனம் சென்றபோது, சிறுபாலம் சேதமடைந்து உடைந்தது.இதனால், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சேதமடைந்த சிறுபாலம் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைகின்றனர்.மேலும், இவ்வழியாக கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே, கடல்மங்கலத்தில் சேதமடைந்த சிறுபாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.குமார்,கடல்மங்கலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை