விநாயகர், துர்க்கை கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் சக்தி விநாயகர் துர்க்கை அம்மன் கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் மாநகராட்சி, வேளிங்கப்பட்டரை, சக்தி விநாயகர் மற்றும் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் டிரஸ்ட் உறுப்பினர்கள், கும்பாபிஷேக விழா குழுவினர் முடிவு செய்தனர். அன்படி, பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்,டன.நாளை மறுநாள், காலை 7:30 மணிக்கு கோவில் கோபுர விமான கலசத்திற்கும், தொடர்ந்து அனைத்து சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. காலை 10:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.