உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உங்களைத் தேடி உங்கள் ஊரில் உத்திரமேரூரில் இன்று முகாம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் உத்திரமேரூரில் இன்று முகாம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தின் வாயிலாக, ஒவ்வொரு தாலுகாவிலும், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தங்கி ஆய்வு நடத்தி வருகிறார்.அக்டோபர் மாதத்திற்கான, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம், உத்திரமேரரூர் தாலுகா தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்ட ஆய்வு பணிகள், கடந்த 16ம் தேதி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கனமழை காரணமாக, இத்திட்ட பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன.இந்நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட ஆய்வு பணிகள் இன்று, உத்திரமேரூர் தாலுகாவில் நடைபெறுகிறது. தாலுகா முழுதும், கலெக்டர் கலைச்செல்வி பல்வேறு அரசு அலுவலகங்களிலும், அரசு திட்டங்களையும் ஆய்வு செய்ய உள்ளார்.இன்று, மாலை 4:30 மணி முதல், 6:00 மணி வரை, உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில், பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார்.உத்திரமேரூர் தாலுகாவைச் சேர்ந்தவர்கள், தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ