மலேசிய நினைவலைகள் நூல் வெளியீடு
மலேசியா நாட்டின் பேராக் மாநிலம், ஈப்போ நகரில் மூன்று புத்தகங்கள் வெளியிடும் விழாநடந்தது. ம.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா எழுதிய 'கடல் மல்லையிலிருந்து கடாரம் வரையிலான மலேசியா நினைவலைகள்' என்ற புத்தகத்தை மலேசியா இந்தியா காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான டத்தோ எம். சரவணன் எம்.பி.,யிடம் மல்லை சத்யா வழங்கினார்.