மேலும் செய்திகள்
ஆலோசனை கூட்டம்
31-Aug-2024
காஞ்சிபுரம்:துாய்மை பாரத இயக்கம் ஊரகம் சார்பில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள துாய்மை காவலர்கள், பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பம்ப் ஆப்பரேட்டர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம், காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மன் மலர்கொடி தலைமை வகித்தார். இதில், வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி தலைமையில், திருப்புட்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர், சர்க்கரை, ரத்த அழுத்தம், பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பல், தோல், இ.சி.ஜி., வாய் புற்றுநோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.நோயின் தன்மைக்கேற்ப மருந்து, மாத்திரை வழங்கினர். இம்முகாமில், துாய்மை காவலர்கள், பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பம்ப் ஆப்பரேட்டர்கள் என, 136 பேர் பங்கேற்றனர். முகாமிற்கான ஏற்பாட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் செய்திருந்தார்.
31-Aug-2024