உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வர்ணம் பூசாத வேகத்தடையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

வர்ணம் பூசாத வேகத்தடையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்:உமையாள்பரனசேரி அரசு பள்ளி எதிரே வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ள வேகத்தடையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், ஒரகடம் அடுத்த, வடக்குப்பட்டு சந்திப்பில் இருந்து, உமையாள்பரசேரி செல்லும் பிரதான சாலை உள்ளது. வளையக்கரணை, காஞ்சிவாக்கம் உள்ளிட்ட பகுதி மக்கள், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.இந்த சாலையில், அதிவேகமாக செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில், உமையாள்பரனசேரி அரசு தொடக்கப் பள்ளி எதிரே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், வேகத்தடை மீது வெள்ளை வர்ணம் பூசவில்லை. மேலும், வேகத்தடையை அறிவுறுத்தும் எச்சரிக்கை பலகையும் அமைக்கவில்லை.இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிஅடைந்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஒட்டிகள், வேகத்தடை எங்குள்ளது என தெரியாமல், அதில் ஏறி, நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.எனவே, வேகத்தடை மீது வெள்ளை வர்ணம் பூச, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !