வெள்ளை வர்ணம் பூசப்படாத வேகத்தடை; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கா ஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் மாட வீதி வழியாக பேருந்து நிலையம், காமாட்சியம்மன் கோவில், செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், உலகளந்த பெருமாள் கோவில் அருகில், மூன்று இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடைகளுக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாததாலும், வேகத்தடையின் மீது, இரவில் ஒளி பிரதிபலிப்பான் ஒட்டப்படாமல் உள்ளதாலும், இச்சாலையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இச்சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், வேகத்தடையை கவனிக்காமல் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும். - தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்.