உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெல் கொள்முதல் நிலையம் கட்டவாக்கத்தில் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் கட்டவாக்கத்தில் திறப்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், கட்டவாக்கத்தில், ஏரி மற்றும் கிணற்று பாசனம் வாயிலாக விவசாயிகள் நவரை மற்றும் சொர்ணவாரி ஆகிய இரு போகத்திற்கு அதிக அளவில் நெல் பயிர் சாகுபடி செய்கின்றனர்.அதன்படி, கடந்த பருவ மழையை தொடர்ந்து, டிசம்பரில், 300 ஏக்கர் பரப்பிலான விளை நிலங்களில் இப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். அப்பயிர்கள் கதிர் முற்றிய நிலையில், சில தினங்களாக அறுவடை பணிகளை துவக்கி உள்ளனர்.அறுவடையான நெல்லை விற்பனை செய்ய விரைவாக அப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் துவக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.அதன்படி, கட்டவாக்கத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று திறந்து வைத்தார்.வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர், அப்பகுதி ஊராட்சி தலைவர் அஞ்சலம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ