மேலும் செய்திகள்
வளர்ந்த புற்களால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
04-Aug-2025
மேல்கதிர்பூர்:மேல்கதிர்பூர் ஊராட்சி, மங்கல்பாடி ஏரி கால்வாயில், கோரைப்புல் வளர்ந்துள்ளதால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர் ஊராட்சியில், மழைநீர் செல்லும் மங்கல்பாடி ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாய் உள்ளது. இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கோரைப்புல் வளர்ந்துள்ளது. இதனால், பலத்த மழை பெய்தால், கால்வாய் மூலம் வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் சூழும் நிலை உள்ளது. எனவே, தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள் மங்கல்பாடி ஏரி கால்வாயை துார்வாரி சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
04-Aug-2025