உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோரைப்புல் வளர்ந்துள்ள வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

கோரைப்புல் வளர்ந்துள்ள வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

ஏனாத்துார்: ஏனாத்துாரில் வடிகால் வாயில் கோரைப்புல், செடிகள் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துார் ஊராட்சி பிரதான சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் உள்ளது. இக்கால்வாயை துார்வாரி பராமரிக்காததால், மண் திட்டுகளாலும், செடிகள், கோரை புற்கள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், பலத்த மழை பெய்தால் வடிகால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாயில் வளர்ந்துள்ள செடிகள், கோரைப்புற்களை அகற்றி, துார்வாரி சீரமைக்க ஏனாத்துார் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ