உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செடிகள் வளர்ந்துள்ள வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

செடிகள் வளர்ந்துள்ள வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

விச்சந்தாங்கல்: விச்சந்தாங்கல் கிராமத்தில், செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள வடிகால்வாயால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஊராட்சி, விச்சந்தாங்கல் கிராமம், மேட்டு காலனியில் மழைநீர் வெளியேறுவதற்காக கான்கிரீட் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் மண் திட்டுகளாலும், செடிகள் வளர்ந்துள்ளதாலும் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், மழை காலத்தில், வடிகால்வாய் மூலம் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, செடிகள் வளர்ந்துள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி