துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, காஞ்சி அன்னசத்திரம் சார்பில், கையுறை மற்றும் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், முதற்கட்டமாக பெரிய காஞ்சிபுரம் பகுதியில் துாய்மை பணி மேற்கொள்ளும் துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. மாதந்தோறும் துாய்மை பணியாளர்களக்கு முக கவசமும், கையுறையும் வழங்க உள்ளோம் என, அன்னசத்திரம் நிர்வாகிகள் பன்னீர்செல்வன், மோகன் ஆகியோர் தெரிவித்தனர்