மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம் 444 மனு க் கள் ஏற்பு
05-Aug-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், 336 பேர் பல்வேறு கோரிக்கை தொடர்பாக, கலெக்டர் கலைச்செல்வியிடம் மனுக்களை வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், ஆக்கிரமிப்பு, பட்டா, உதவித்தொகை, வேலைவாய்ப்பு என, பல்வேறு வகையான கோரிக்கை தொடர்பாக 336 பேர் மனுக்கள் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், எய்ட்ஸ் வழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் கலைச்செல்வி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், திட்ட இயக்குனர் ஆர்த்தி, சுகாதார அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
05-Aug-2025