உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போக்குவரத்து எச்சரிக்கை பலகை சாலை வளைவில் வைக்க கோரிக்கை

போக்குவரத்து எச்சரிக்கை பலகை சாலை வளைவில் வைக்க கோரிக்கை

உத்திரமேரூர், மே 20--உத்திரமேரூர் -- புக்கத்துறை நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, திருமுக்கூடல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர் மதுராந்தகம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.அதேபோல, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்குவாரி மற்றும் கிரஷர் ஆகியவற்றில் இயக்கப்படும் லாரிகளும் இந்த சாலையில் சென்று வருகின்றன. இதனால், இச்சாலை பல இடங்களில் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.இதனால், நெடுஞ்சாலைத் துறை சார்பில் இச்சாலை இரண்டு மாதத்திற்கு முன் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், ரெட்டமங்கலம் பகுதியில் செல்லும் சாலையில் ஆபத்தான வளைவு உள்ளது.இந்த சாலை வளைவில் போக்குவரத்து எச்சரிக்கை பலகை இல்லாமல் உள்ளது. இதனால், அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, திருமுக்கூடல் சாலையில் உள்ள ஆபத்தான வளைவில், போக்குவரத்து எச்சரிக்கை பலகை அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி