உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி கட்டடத்தில் செடிகள் அகற்ற கோரிக்கை

பள்ளி கட்டடத்தில் செடிகள் அகற்ற கோரிக்கை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், நெய்யாடுபாக்கம் கிராமத்தில், அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இங்குள்ள, பள்ளி கட்டடம் முறையாக பராமரிப்பு இல்லாததால், கட்டடத்தில் அரச மரச்செடிகள் வளர்ந்து வருகின்றன.மரத்தின் வேர்களால் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, அதன் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டு, சேதமடையும் நிலை உள்ளது. மேலும், அறிவியல் ஆய்வக கட்டடம் அருகே செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. பாம்பு ,பூரான் உள்ளிட்ட விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே, பள்ளி கட்டடத்தில் வளர்ந்து வரும் அரச மரச்செடிகளை அகற்றி, வளாகத்தை துாய்மைப்படுத்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி