கழிப்பறை சுவரில் வளர்ந்துள்ள செடியால் வலுவிழக்கும் அபாயம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பறை கட்டட சுவரில் வளர்ந்துள்ள அரச செடியை வேருடன் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாநகராட்சி 46வது வார்டு, ஓரிக்கை காந்தி நகரில், மாநகராட்சி சார்பில், கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறையை, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.முறையான பராமரிப்பு இல்லாததால், கழிப்பறை கட்டடத்தின் சுவரில் அரச செடி வளர்ந்துள்ளதால், விரிசல் ஏற்பட்டுள்ளது.இச்செடியின் வேர்கள் வேரூன்றி வளர்வதால், நாளடைவில் கட்டடம் வலுவிழக்கும் நிலை உள்ளது. எனவே, பொது கழிப்பறை கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச செடியை வேருடன் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.