உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒரு வாரமாக வழிந்தோடும் கழிவுநீர் பெருமாள் தெருவில் சுகாதார சீர்கேடு

ஒரு வாரமாக வழிந்தோடும் கழிவுநீர் பெருமாள் தெருவில் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்,:பெரிய காஞ்சிபுரம் பெருமாள் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத்தெருவில் பட்டனத்தார் அங்காளம்மன் கோவில் மற்றும் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. ஏகாம்பரநாதர் கோவில், புதிய ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் பெருமாள் தெரு வழியாக சென்று வருகின்றனர்.மக்கள் நடமாட்டம் மிகுந்த இச்சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, இரு இடங்களில் உள்ள மேன்ஹோல் மற்றும் பொது கழிப்பறையில் இருந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.இதனால், பொது கழிப்பறையை பகுதிவாசிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சாலையில் ஒரு வாரமாக வழிந்தோடும் கழிவுநீரால் அப்பகுதில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, பெருமாள் தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை