உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை விபத்தில் வியாபாரி பலி

சாலை விபத்தில் வியாபாரி பலி

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், புத்தாகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 60. காய்கறி கடை வியாபாரி. இவர், நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு, தன் வீட்டில் இருந்து, சைக்களில், கடை தெருவிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, காஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், முருகன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த வாலாஜாபாத் போலீசார், அவரது உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி