மேலும் செய்திகள்
மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
07-Feb-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம், கலெக்டர் தலைமையில் நடத்தப்படுகிறது. பிப்ரவரி மாதத்திற்கான சிறப்பு குறைதீர் கூட்டம், வரும் 12ம் தேதி மாலை 3:00 மணிக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடத்தப்பட உள்ளது.இம்முகாமில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்கலாம்.மேலும் விபரங்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை, 044 - -2999 8040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
07-Feb-2025