உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பராமரிப்பின்றி பாலுாட்டும் பெண்கள் அறை

வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பராமரிப்பின்றி பாலுாட்டும் பெண்கள் அறை

வாலாஜாபாத்:பேருந்து நிலையங்களில், பாலுாட்டும் பெண்கள் அறை, 2015ம் ஆண்டு, அப்போதைய அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தமிழகம் முழுதும் துவங்கப்பட்டது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில், பாலுாட்டும் பெண்கள் அறை திறக்கப்பட்டது.அதன் ஒரு பகுதியாக வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் இத்திட்டத்திற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டு, பெண்கள் அதை பயன்படுத்தி வந்தனர்.இந்த பாலுாட்டும் பெண்கள் அறை, சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல் பழுதான நிலையில் காணப்படுகிறது. கதவை திறந்தாலே துர்நாற்றம் வீசுவதுடன் இருள் சூழந்த நிலையில் உள்ளது.சில நேரங்களில் இந்த அறை பூட்டப்படாமல் இருக்கும்போது, சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருவதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் உள்ள பாலுாட்டும் பெண்கள் அறையை முறையாக பராமரித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி