உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உள்ளாவூரில் குழாய் உடைந்து வீணாகும் பாலாற்று குடிநீர்

உள்ளாவூரில் குழாய் உடைந்து வீணாகும் பாலாற்று குடிநீர்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது உள்ளாவூர் கிராமம். இக்கிராம குடிநீர் தேவைக்கு பழையசீவரம் பாலாற்று படுகையில், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது.ஆழ்துளை கிணறு வாயிலாக உறிஞ்சப்படும் தண்ணீர், நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய் வழியாக உள்ளாவூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி, அதன் வாயிலாக, அப்பகுதி வீட்டு குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், பழையசீவரம் பாலாற்றில் இருந்து, உள்ளாவூர் சென்றடையும் நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய், சாலையோர பாலாற்றங்கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, கசிந்து வெளியேறி வருகிறது.இதனால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் உடைப்பை சீர் செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை